LATEST NEWS
யாரு சாமி நீ..? நடுரோட்டில் படுத்துக்கொண்டு செல்ஃபி அலப்பறை… போதை ஆசாமியால் அலறிய கோவை… வைரல் வீடியோ…!!
கோவையின் புறநகர்ப் பகுதியில் மதுபோதையில் இருந்த நபர் ஒருவர், பரபரப்பான நட்டநடு சாலையில் படுத்துக்கொண்டு செல்ஃபி எடுத்து அலப்பறையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதையின் உச்சத்தில் இருந்த அந்த நபர், சாலையின் நடுவே வாகனங்கள் வந்து கொண்டிருப்பதைச் சற்றும் பொருட்படுத்தாமல் தரையில் படுத்துக்கொண்டு விதவிதமாகப் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளார்.
இதனால் அந்த வழியாக வந்த கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் விபத்தைத் தவிர்க்கத் தங்களது வாகனங்களை திடீரென நிறுத்த வேண்டியிருந்தது. மேலும், நடுரோட்டில் அந்த நபர் செய்த இந்த ஆபத்தான செயலால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், சாலையில் படுத்திருந்த நபரை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்திப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் பொது இடத்தில் போதையில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டது குறித்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முழுச் சம்பவத்தையும் அங்கிருந்தவர்கள் தங்களது மொபைல் போனில் பதிவு செய்த நிலையில், அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது.
