CRIME
ஐயோ நெஞ்சை பதறுது..! லாரி மீது பாய்ந்த பஸ்..!” நள்ளிரவில் 5 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலி.. ஐதராபாதை உலுக்கிய கோர விபத்து..!!!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 42 பயணிகளுடன் ஆந்திர மாநிலம் ஏலூருக்குப் புறப்பட்டுச் சென்ற தனியார் சொகுசுப் பேருந்து, இன்று அதிகாலை சூர்யா பேட்டை மாவட்டம் கொடடா அருகேயுள்ள தோர குண்டா புறநகர் பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது எதிர்பாராத விதமாக அதிவேகத்தில் மோதி கோர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் பயங்கர அதிர்வில் பேருந்தின் முன் பகுதி முற்றிலும் நொறுங்கியதால், இடிபாடுகளுக்குள் சிக்கி 5 பெண் பயணிகள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த மேலும் 20 பயணிகள் கடுமையான படுகாயமடைந்ததைத் தொடர்ந்து, விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மற்றும் மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். காயமடைந்தவர்கள் மற்றும் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, சிகிச்சை மற்றும் உடற்கூறாய்வுக்காகக் கொடடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நள்ளிரவில் அரங்கேறிய இந்த நெஞ்சை உலுக்கும் கொடூர சாலை விபத்து குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
