LATEST NEWS
“கடவுளே என்னை காப்பாத்துப்பா” சீறிப்பாய்ந்த ஆற்று வெள்ளத்திலிருந்து தப்பிக்க நடு ஆற்றில் மரத்தின் மேல் ஏறிய நபர்… நெஞ்சை பதறவைக்கும் பகீர் வீடியோ..!!
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக அஞ்சனி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுரேஷ் பில் என்ற நபர் ஆற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். சீறிப்பாய்ந்து வந்த வெள்ளத்தின் பலத்த நீரோட்டத்திலிருந்து தப்பிக்க, அவர் ஆற்றின் நடுவே இருந்த ஒரு உயரமான மரத்தின் மீது ஏறித் தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டார். அவர் மரத்தின் உச்சியில் தவித்துக்கொண்டிருந்ததைக் கண்ட உள்ளூர் கிராம மக்கள், உடனடியாக மீட்புப் படை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். ஆற்றில் வெள்ளத்தின் வேகம் மிகக் கடுமையாக இருந்ததால், அவரை மீட்பதில் அதிகாரிகளுக்குப் பெரும் சவால்கள் நிலவின.
https://www.instagram.com/reel/Dbe4NzeyBz2/?utm_source=ig_web_button_share_sheet
மழைக்காலத்தில் ஆற்றில் நீர்மட்டம் மிக வேகமாக உயரக்கூடும் என்பதால், பொதுமக்கள் யாரும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள் மற்றும் ஓடைகளைக் கடக்க வேண்டாம் என்றும், நீர் தேங்கியுள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அரசு அதிகாரிகள் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர். மகாராஷ்டிராவில் அடுத்த ஐந்து நாட்களுக்குப் பரவலான கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஏற்கனவே கணித்துள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட், ஆரஞ்சு மற்றும் எல்லோ அலர்ட் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
மாநில அவசரக்கட்டுப்பாட்டு மையத்தின் தகவல்படி, அண்மையில் பெய்த இந்த கனமழை தொடர்பான விபத்துகளில் சிக்கி ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர், 10 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், கனமழையினால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, வெள்ளப் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசித்து வந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பால்ஹர், மும்பை, புனே போன்ற மாவட்டங்கள் மிக அதிகளவிலான மழையைப் பதிவு செய்துள்ள வேளையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிகழ்நேர எச்சரிக்கைகளை அனுப்பும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
