LATEST NEWS
BREAKING: மக்களுக்கு நன்றிக் கடன் செலுத்தவே விஜய் அரசியலுக்கு வந்தார்.. சட்டசபையில் நிதியமைச்சர் புகழாரம்..!!
“முதலமைச்சர் விஜய் அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்குத் தனது நன்றிக் கடனைச் செலுத்துவதற்காக மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளார்” என்று தவெக அரசின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றிய நிதி அமைச்சர் மரிய வில்சன் மிக நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவனின் நெறிப்படி, பிறப்பால் அனைவரும் சமம் என்ற உன்னதமான கோட்பாட்டுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஒட்டுமொத்தத் தமிழக மக்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார் என்றும் அவர் தனது பட்ஜெட் உரையில் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய நிதி அமைச்சர், ஆட்சிப் பொறுப்பேற்ற மிகக் குறுகிய மாதங்களிலேயே தவெக அரசு தேர்தலின் போது மக்களுக்குச் சொன்ன வாக்குறுதிகள் பலவற்றைச் செய்து காட்டி, சாதனைப் பயணத்தைத் தொடங்கியுள்ளது என்றார். தமிழகத்தின் நிதி நிலைமையைச் சீரமைத்து, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தேவையான மக்கள் நலத்திட்டங்களை இந்த பட்ஜெட் உள்ளடக்கியுள்ளது என்றும், தவெக அரசு எப்போதும் மக்கள் பக்கம் நின்று உழைக்கும் அரசு என்பதை இந்த சில மாத கால ஆட்சி நிரூபித்துள்ளது என்றும் அவர் உறுதியளித்துப் பேசினார்.
