CRIME
“அடப்பாவி…! என் பொண்டாட்டி ஓடிப்போயிட்டா சார்..!” கண்ணீர் விட்டு நாடகமாடிய கணவன்… கள்ளக்காதலியுடன் போட்ட ‘கொலை ஸ்கெட்ச்’ அம்பலம்.. போலீசாரையே உறையவைத்த பிண்ணனி..!!
மனைவி காணாமல் போனதாகக் காவல் நிலையத்தில் நாடகமாடிய ஓலா வாடகைக் கார் ஓட்டுநர், தனது கள்ளக்காதலியுடன் இணைந்து மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் லக்னோ அருகே ரஹீமாபாத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கார் ஓட்டுநரான உமேந்திர பிரதாப் சிங் (31), தனது மனைவி அஞ்சலி நகைகளுடன் ஓடிவிட்டதாக ஜூலை 31 அன்று புகார் அளித்துள்ளார். ஆனால், கோமதி ஆற்றில் இருந்து அஞ்சலியின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அஞ்சலியின் சகோதரர் அளித்த புகாரையும், செல்போன் இருப்பிடத் தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் நடத்திய தொழில்நுட்ப விசாரணையில் கணவனின் பொய்யான தகவல்கள் அம்பலமாகின.
விசாரணையில், கால் சென்டர் ஊழியரான ஆர்த்தி வர்மா (31) என்பவருடன் உமேந்திராவுக்குத் திருமணத்தை மீறிய உறவு இருந்ததும், அதை அஞ்சலி கண்டித்ததால் இருவருமாகச் சேர்ந்து அஞ்சலியின் வாய் மற்றும் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததும் தெரியவந்தது. கொலையை மறைக்கவும், ஆதாரங்களை அழிக்கவும் அஞ்சலியின் உடலை ஸ்விஃப்ட் டிசையர் காரில் ஏற்றிச் சென்று கோமதி ஆற்றில் வீசியுள்ளனர். பின்னர், அஞ்சலி நகைகளுடன் ஓடிவிட்டதாகக் காட்டுவதற்காக வீட்டின் நகைகளை எடுத்து ஆர்த்தியிடம் கொடுத்துவிட்டு உமேந்திரா காவல் நிலையத்தில் நாடகமாடியுள்ளார்.
தடயவியல் ஆதாரங்கள் மற்றும் மின்னணுச் சான்றுகளின் அடிப்படையில் உமேந்திரா மற்றும் அவரது கள்ளக்காதலி ஆர்த்தி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் மதிப்பிலான 32 தங்க, வெள்ளி நகைகள், இரண்டு ஆண்ட்ராய்டு செல்போன்கள் மற்றும் உடலை எடுத்துச் செல்லப் பயன்படுத்திய கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், கைது செய்யப்பட்ட உமேந்திரா மீது ஏற்கனவே 2020-ஆம் ஆண்டில் தாக்குதல் வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதையும் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
