LATEST NEWS
BREAKING: வியசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்.. கடன் தள்ளுபடி.. பட்ஜெட்டில் அறிவித்தார்..!!
மாநில பட்ஜெட்டில் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ரூ.5,932 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என நிதியமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் ரூ.75,000 வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையாக 100% கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ரூ.75,000-க்கும் அதிகமாகக் கடன் பெற்ற விவசாயிகளுக்குக் கடன் தொகையில் ரூ.35,000 வரை தள்ளுபடி சலுகை வழங்கப்படுவதாக நிதியமைச்சர் தன் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தள்ளுபடி அறிவிப்பின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 14 லட்சம் விவசாயிகள் நேரடியாகப் பயனடைந்து வருகின்றனர். தள்ளுபடி செய்யப்பட்டத் தொகையானது பயனாளிகளான விவசாயிகளின் வங்கிச் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வரும் பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
