LATEST NEWS
“இதெல்லாம் ஒரு மருத்துவமனையா..?” படுகாயமடைந்த இளைஞருக்கு அட்டைப் பெட்டி கட்டு போட்ட அரசு மருத்துவர்கள்.. அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அகோரக் கூத்து.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!
பீகார் மாநிலம் பெகுசாராயில் உள்ள மஞ்சௌல் அரசு மருத்துவமனையில் இருந்து மிக மோசமான மற்றும் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சாலை விபத்தில் படுகாயமடைந்த இளைஞருக்கு உரிய முறையில் மாவுக்கட்டு போட்டு சிகிச்சை அளிப்பதற்குப் பதிலாக, அங்கிருந்த மருத்துவர்கள் அவரது காலில் அட்டைப் பெட்டியைப் வைத்துக் கட்டி, மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
बेगूसराय के मंझौल अस्पताल से बेहद शर्मनाक तस्वीर सामने आई है। सड़क दुर्घटना में घायल एक युवक के पैर में प्लास्टर करने के बजाय डॉक्टरों ने कार्टून बांधकर उसे रेफर कर दिया।
यह सिर्फ लापरवाही नहीं, बल्कि मरीज की जान और स्वास्थ्य के साथ गंभीर खिलवाड़ है।@Nishantjdu @Nishantjdu81 pic.twitter.com/dsTrAJN8Tc— Mukesh singh (@Mukesh_Journo) August 5, 2026
அரசு மருத்துவமனையில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் வெறும் மருத்துவ அலட்சியம் மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரின் உயிருடனும் உடல்நலத்துடனும் விளையாடிய தீவிரமான மனித உரிமை மீறலாகும். இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்களின் இத்தகைய பொறுப்பற்ற செயலுக்கு பொதுமக்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
