LATEST NEWS
அடக் கடவுளே..! கொஞ்சம் லேட் ஆகியிருந்தா என்னவாகியிருக்கும்… மோட்டார் சைக்கிளின் பின்புறத்திலேயே பிரசவித்த தாய்…! வியட்நாமில் திக் திக் நிமிடங்கள்..!!
வியட்நாமின் தாய் குயென் மாகாணத்தில் உள்ள பூ லுவோங் மருத்துவமனைக்கு வெளியே, 25 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளின் பின்புறத்திலேயே குழந்தையைப் பெற்றெடுத்த பரபரப்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 32 வார கர்ப்பிணியான அந்தப் பெண்ணுக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால், அவர் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால், அவர்கள் மருத்துவமனை நுழைவாயிலை அடைவதற்குள்ளாகவே குழந்தை பிறந்துவிட்டது. பச்சிளங்குழந்தையின் தொப்புள்கொடி இன்னும் இணைந்த நிலையில், அந்தப் பெண் திகைத்துப்போன பார்வையாளர்களுக்கு இடையே மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கும் காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த மருத்துவமனை ஊழியர்கள், பச்சிளம் குழந்தைக்கு எவ்வித அழுத்தமும் ஏற்படாதவாறு அந்தப் பெண்ணை மோட்டார் சைக்கிளிலிருந்து கவனமாக இறக்கி நிற்க வைத்தனர். பின்னர், மருத்துவர்களும் செவிலியர்களும் குழந்தையைப் போர்த்தி கதகதப்பாக்கி, தொப்புள் கொடியை வெட்டிப் பிரித்தனர். அதனைத் தொடர்ந்து, தாய் மற்றும் குழந்தை இருவரையும் உடனடி மேலதிக சிகிச்சைக்காகப் பிரசவ அறைக்கு மாற்றினர்.
https://www.instagram.com/reel/Dbo-eTVijfT/?utm_source=ig_web_button_share_sheet
VnExpress ஊடகத் தகவலின்படி, 32 வாரங்களில் குறைப்பிரசவத்தில் பிறந்த அந்த ஆண் குழந்தை சுமார் 2 கிலோகிராம் எடையுடன் இருந்தது. வழக்கமான பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பின் ஒரு பகுதியாக அக்குழந்தைக்கு ஹெபடைடிஸ் பி தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது தாயும் குழந்தையும் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ள மருத்துவமனை அதிகாரிகள், குறைமாதத்தில் பிறந்ததால் குழந்தை தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.
