LATEST NEWS
ஐயோ கடவுளே…! 2 வயது பேரனை சித்திரவதை செய்த தாத்தா, பாட்டி.. இறுதியில் நேர்ந்த சோகம்.. 1,100 மணி நேர வீடியோவில் பதிவான நரகம்.. உலகையே உலுக்கிய கொடூர சம்பவம்..!!
பிரிட்டன் வேல்ஸ் பகுதியில் ஆகஸ்ட் 2021-ல், 2 வயதேயான ஈத்தன் ஐவ்ஸ்-கிரிஃபித்ஸ் என்ற குழந்தை தனது குடும்பத்திலேயே தொடர்ச்சியான புறக்கணிப்பு, பட்டினி மற்றும் கொடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தான். அன்போடும் அரவணைப்போடும் வளர்க்கப்பட்டிருக்க வேண்டிய அந்தக் குழந்தை, தன் குறுகிய வாழ்நாளில் சொல்லொணா நரக வேதனையை அனுபவித்துள்ளான். 1,100 மணி நேரத்திற்கும் மேலான சிசிடிவி ( காட்சிகளும், மருத்துவச் சான்றுகளும் அக்குழந்தை கடுமையான ஊட்டச்சத்தின்மை மற்றும் எண்ணற்ற காயங்களால் பாதிக்கப்பட்டிருந்ததை உறுதிப்படுத்தின.
you should have been treated with love and care but instead you lived a short life of horror..
In August 2021, 2-year-old Ethan Ives-Griffiths d#ed after pr@longed neglect, starvation, and abuse in his family home in Wales.
Over 1,100 hours of CCTV documented the abuse, with… pic.twitter.com/AqJPNe1Yj8— Creepy Network (@CreepyNetworkTv) August 7, 2026
இந்த கொடூரச் சம்பவத்தில், குழந்தையின் தாத்தா மற்றும் பாட்டிக்குக் கொலைக் குற்றம் உறுதி செய்யப்பட்டு, 2025-ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், குழந்தையின் மரணத்திற்கு காரணமான சூழ்நிலையை அனுமதித்ததற்காக அவனது தாயாருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்தக் கொடூரக் சம்பவம் உலகம் முழுவதும் உள்ள மக்களை அதிர்ச்சியிலும் பெரும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
