LATEST NEWS
“தம்பி.. நீங்க எந்த ஊரு போறீங்க..?” மடியில் குழந்தையுடன் தடுமாறிய சிறுவன்.. சந்தேகமடைந்து பயணிகள் செய்த ‘அந்த’ ஒரு காரியம்… இணையத்த்தை உலுக்கும் வீடியோ..!!
ராஜஸ்தானின் அல்வாரில் இருந்து பரத்பூர் நோக்கிச் சென்ற பேருந்தில், தனது மடியில் ஒரு சிறு குழந்தையுடன் பயணித்த இளம் சிறுவனின் செயல் அங்கிருந்த பயணிகளிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் நடத்தை மாறுபட்டு இருந்ததால் சந்தேகமடைந்த சக பயணி ஒருவர் அவனிடம் விசாரித்தபோது, அவன் முதலில் பரத்பூர் என்றும் பின்னர் ஆக்ரா என்றும் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்துள்ளான். சிறுவனின் இந்தத் தடுமாற்றமும் தெளிவற்ற பதிலும், அவன் ஏதேனும் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவனோ அல்லது தவறான நபர்களின் கட்டுப்பாட்டில் சிக்கியுள்ளானோ என்ற அச்சத்தை பயணிகள் மத்தியில் தீவிரப்படுத்தியது.
अलवर राजस्थान से भरतपुर वाली बस में देखिए बैठा ये लड़का एक बच्चे को गोदी में लिए हुआ था।
एक यात्री ने पूछा कहा जाना कभी बोला भरतपुर , कभी आगरा। तो भाई को शक हो गया कहीं बच्चा गलत हाथों में तो नहीं आ गया। pic.twitter.com/FHJvRd2RC8— सीतामढ़ी जिला 🇮🇳 (@SitamarhiJila) August 8, 2026
இந்தச் சம்பவத்தின் பதற்றமான சூழ்நிலையை சக பயணி ஒருவர் தனது கைபேசியில் படம்பிடிக்க, அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், பேருந்தில் இருந்த பயணிகளின் விழிப்புணர்வையும் உடனடி கேள்விகளையும் பாராட்டி வருகின்றனர். அதேவேளையில், சிறு குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகளின் பாதுகாப்பில் சந்தேகத்திற்கிடமான நிகழ்வுகள் தென்பட்டால், உடனடியாகக் காவல்துறையினருக்கோ அல்லது குழந்தை நல உதவி எண்களுக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் எனச் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
