CRIME
“ரூ.10 லட்சம் அசல் பணம் தந்தால்.. ரூ.30 லட்சம் கள்ள நோட்டு..!” மகாராஷ்டிரா பங்களாவில் ரகசிய ஆட்டம் குளோஸ்..! அதிரடி ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறை..!!
மகாராஷ்டிர மாநிலம் தலேகானில் உள்ள ஒரு பங்களாவில் இயங்கி வந்த கள்ள நோட்டுத் தயாரிப்பு கூடத்தை காவல் துறையினர் அதிரடியாகக் கண்டுபிடித்துள்ளனர். ரூ.10 லட்சம் அசல் பணத்திற்கு ரூ.30 லட்சம் போலி நோட்டுகளைத் தருவதாகக் கூறி மோசடி செய்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த இருவர், தலேகானைச் சேர்ந்த இருவர் மற்றும் சட்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தச் சோதனையின் போது, போலி நோட்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் மற்றும் நவீன உபகரணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்கள், காகிதங்களைச் சிறப்பு ரசாயனத்தில் நனைத்து, அதன் மீது நோட்டின் அச்சைச் செலுத்தி எவ்வாறு கள்ள நோட்டுகளைத் தயாரிக்கிறார்கள் என்பதை நேரில் செய்து காட்டினர்.
இப்பகுதியில் கள்ள நோட்டுகள் அச்சிடப்படுவது இது முதன்முறையல்ல. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ரூ.500 கள்ள நோட்டுகளை அச்சிட்ட கிராஃபிக் டிசைனர் உட்பட ஐந்து பேரும், டிசம்பர் மாதத்தில் ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இது போன்ற கும்பல்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த அதிரடிச் சோதனையின் மூலம் ஒரு பெரிய நெட்வொர்க்கை போலீசார் முறியடித்துள்ளனர்.
