CRIME
இன்ஸ்டாகிராம் காதல்… ரயில் நிலையத்தில் தாலி… காதலித்து கரம் பிடித்த ஒரேநாளில் நேர்ந்த சோகம்.. கதறி துடிக்கும் காதலன்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
பீகார் மாநிலம் அரரியா மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி மனிஷா குமாரிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாணவர் தில்குஷ் குமாருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல் நாளடைவில் தீவிரமான நிலையில், மனிஷாவுக்குப் பெற்றோர் வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்க முயன்றதை ஏற்க மறுத்து இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி ரயில் நிலையத்தில் வைத்துத் திருமணம் செய்துகொண்டனர். தங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயம் தொடங்கியதாக மகிழ்ந்த அந்த இளம் ஜோடி, அடுத்த நாள் மாலை புகழ்பெற்ற கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்யப் புறப்பட்டபோது ஏற்பட்ட திடீர் தலைசுற்றல் மற்றும் கடுமையான உடல் சோர்வு காரணமாக மனிஷாவுக்கு உடல்நிலை மோசமடைந்துள்ளது.
உடனடியாக உள்ளூர் மக்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மனிஷாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்ததை அடுத்து, தில்குஷ் கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் உலுக்கியது. தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், இன்ஸ்டாகிராம் காதல், ரயில் நிலையத் திருமணம் மற்றும் திடீர் மரணம் குறித்த அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.
