CRIME
அதிர்ச்சி..! “யூடியூப் கற்றுக்கொடுத்த கொடூர வித்தை..!” நாட்டு வெடிகுண்டுடன் சிக்கிய 17 வயது சிறுவன்… கடலூர் கொலை வழக்கில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!
கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சசியைக் கொடூரமான முறையில் நாட்டு வெடிகுண்டு வீசியும், வெட்டியும் கொலை செய்த வழக்கில், புதுச்சேரி எல்லைப் பகுதியான இரட்டைசாவடியில் நடந்த இச்சம்பவம் தொடர்பாக 8 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, இரட்டைசாவடியில் தனது காரைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்த சசிக்குமாரை, பைக்கில் வந்த மர்ம நபர்கள் திடீரெனத் தாக்கிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடியிருந்தனர்; இதுகுறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் தற்போது கொலையாளிகளைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புதுச்சேரியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்ததுடன், அதனைச் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலிடம் வழங்கியதாக வெளியாகி உள்ள அதிர்ச்சித் தகவல் காவல்துறையினரை உலுக்கியுள்ளது. மேலும், போலீசாரின் சந்தேகத்திற்கு இடமளிக்காத வகையில் அந்த நாட்டு வெடிகுண்டுகளைக் கீரை கட்டுகள் மற்றும் கோல மாவுக்குள் மறைத்துச் சம்பவ இடத்திற்குத் தந்திரமாகக் கொண்டுவந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
