LATEST NEWS
“தமிழகத்தில் மீண்டும் ஊழல் தொடங்கிடுச்சு… 1 வருஷம் கழிச்சு பிரச்சனை பண்றதுக்கு முன்னாடி இப்போதே சொல்றேன்..!” அண்ணாமலை எச்சரிக்கை..!!
தமிழகத்தில் ஊழல் மீண்டும் தொடங்கிவிட்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். ஊழலுக்கு எதிராக முதல்வர் விஜய் இருப்பது உண்மைதான் என்றாலும், சில அமைச்சர்கள் தற்போது லஞ்சம் வாங்கத் தொடங்கிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை, ஆனால் நாங்கள் பணம் கொடுத்துதான் வெற்றி பெற்று வந்திருக்கிறோம்; எனவே எங்களுக்கு திட்டங்களில் 2% அல்லது 4% கமிஷன் கொடு என்று அமைச்சர்கள் கேட்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு வருடம் கழித்துப் பெரிய பிரச்சனையாக மாறுவதற்கு முன்பே, இந்த விவகாரத்தை இப்போதே அரசின் கவனத்திற்குக் கொண்டுவருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
