அடக்கடவுளே..! “அவசரமா வீட்டுக்கு வான்னு கூப்பிட்ட மனைவி..!” கதவை உடைத்து பார்த்த கணவனுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. அடுத்த நொடியே கள்ளக்காதலன் எடுத்த விபரீத முடிவு.. நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அடக்கடவுளே..! “அவசரமா வீட்டுக்கு வான்னு கூப்பிட்ட மனைவி..!” கதவை உடைத்து பார்த்த கணவனுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. அடுத்த நொடியே கள்ளக்காதலன் எடுத்த விபரீத முடிவு.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் சிவகுமாரின் மனைவி சுஜாதாவுக்கும், அவரது நண்பரான அச்சுதானந்தனுக்கும் இடையே திருமணத்தை மீறிய தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக அச்சுதானந்தனின் மனைவி பரிமளா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிவகுமாரிடம் எச்சரித்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று சுஜாதா தனது கணவரை செல்போனில் அவசரமாக வீட்டிற்கு அழைத்ததையடுத்து, கதவு திறக்கப்படாததால் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று சிவகுமார்பார்த்தார்.

அப்போது தனது மனைவி தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சுஜாதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்; இந்தத் தகவலறிந்த அவரது கள்ளக் காதலன் அச்சுதானந்தனும் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்று தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோத்தகிரி காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், சுஜாதாவின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்; இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in