LATEST NEWS
“நொடியில் நடந்த விபரீதம்..!” மனைவி போட்டோ எடுத்தபோது நீர்வீழ்ச்சியில் விழுந்த கணவன்.. அடுத்த நொடியே நடந்த அதிசயத்தை நீங்களே பாருங்க.. நெஞ்சை பதறவைக்கும் திகில் வீடியோ..!!
ரஷ்யாவின் தாகெஸ்தான் குடியரசில் அமைந்துள்ள சால்டா பள்ளத்தாக்கில், உலகின் அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் சால்டா நிலத்தடி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் அந்த நிலத்தடி குகைக்குள் சுற்றுலாப் பயணிகள் பலர் வந்து செல்வது வழக்கம். அப்படி ஒரு நாள், கணவனும் மனைவியும் அந்த அற்புதமான இடத்திற்குச் சென்றுள்ளனர். அங்குள்ள குகையின் குளிர்ந்த சூழலையும், அழகிய நீர்வீழ்ச்சியையும் ரசித்தபடி, மனைவி தன் கணவரைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்துள்ளார்.
حدث داخل كهف في أخدود سالتا بجمهورية داغستان في روسيا..شلال سالتا الجوفي
الزوجه كانت تقوم بالتقاط صورة لزوجها ولكن ما حدث كان صادم حيث أن الأرض زلقه بسبب الرطوبه الموجوده في الكهف..
الرجل تراجع خطوتين للوراء لاتقاط صورة عند الشلال وأثناء رجوعه أنزلق ليسقط من فوق الشلال لاكن… https://t.co/jdkMBKDo5M pic.twitter.com/rN5pgXQROI— تشارلز (@MyovSs) August 17, 2026
ஆனால், அந்த மகிழ்ச்சியான தருணம் சில நொடிகளில் திகிலாக மாறியது. குகைக்குள் இருந்த அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக தரை மிகவும் வழுக்கலாக இருந்தது. புகைப்படம் எடுப்பதற்காகக் கணவர் அறியாமல் இரண்டு அடிகள் பின்னால் சென்றபோது கால் வழுக்கி நீர்வீழ்ச்சியின் மேலிருந்து கீழே விழுந்தார். எதிர்பாராத இந்த விபத்தால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர், இருப்பினும் பெரும் அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்தவிதமான காயமோ அல்லது பாதிப்போ ஏற்படாமல் அவர் உயிர் தப்பியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
