LATEST NEWS
துபாயில் லட்சங்களில் சம்பளம்… திடீரென அத்தனை தொழிலையும் கைவிட்டு உத்தரகாண்ட் சென்ற இளைஞர்…! கோடிகளைத் துறந்து மலை கிராமத்தில் ‘ஸ்லோ லைஃப்’ வாழும் நபரின் ஆச்சரியப் பின்னணி..!!
துபாயில் ஆடம்பரமான வாழ்க்கை மற்றும் அதிக வருமானம் தரும் ரியல் எஸ்டேட் தொழிலை விட்டுவிட்டு, உத்தரகாண்டின் அமைதியான மலைப்பகுதியில் எளிமையான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்த ஒருவரின் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரியல் எஸ்டேட் துறையில் தீவிரமாக உழைத்து ஓடிக்கொண்டிருந்த அவர், நகரத்தின் ஆடம்பரம் மற்றும் பரபரப்பான வாழ்க்கையிலிருந்து விலகி, உத்தரகாண்ட் மாநிலத்தின் காசர் தேவி என்ற அமைதியான பகுதிக்குச் சென்று குடியேறியுள்ளார்.
இந்த திடீர் மாற்றத்திற்குப் பின்னால் ஒரு சோகமான பின்னணி உள்ளது. அவரது தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தபோது, அவர் மருத்துவமனைகளுக்கு அலைந்து திரிந்த அனுபவம் வாழ்க்கையைப் பற்றிய அவரது பார்வையையே முழுமையாக மாற்றியது. ஓயாமல் பணத்திற்காகவும் ஆடம்பரத்திற்காகவும் ஓடும் வாழ்க்கையில் உண்மையான மனநிம்மதி இல்லை என்பதை உணர்ந்த அவர், மலைகளின் அமைதியில் தான் தனக்கான அமைதி உள்ளது என்பதைக் கண்டறிந்தார்.
https://www.instagram.com/reel/DcZDMA0TSXz/?utm_source=ig_web_button_share_sheet
தற்போது காசர் தேவியில் ‘தோடா ஸ்லோ’ என்ற சிறிய கேஃபேவை நடத்தி வரும் அவர், பரபரப்பான வாழ்க்கையைத் தவிர்த்து நிதானமாகவும் அமைதியாகவும் வாழும் ‘ஸ்லோ லைஃப்’ முறையை ஊக்குவித்து வருகிறார். இவரைப் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, ஆடம்பரமான துபாய் வாழ்க்கையைத் துறந்து அமைதியைத் தேடிச் சென்ற அவரது துணிச்சலான முடிவையும் சிந்தனையையும் இணையவாசிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
