LATEST NEWS
பேரழிவிற்கு காரணம் சீனா தான்… அவங்க உண்மையை மறைச்சுட்டாங்க… என கொந்தளிக்கும் நேபாளம்… பெரு வெள்ளத்தின் பின்னால் இருக்கும் திடுக்கிடும் ரகசியம்..!!
திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை மற்றும் பாறைச் சரிவு காரணமாக நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 172-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் பேரிடரால் நேபாளத்தின் ரசுவாகதி மற்றும் சீன எல்லையான கிராங் துறைமுகப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், சீனப் பகுதியில் இருந்த இயற்கை அணை/பேரிடர் சரிவுதான் இந்த வெள்ளத்திற்குக் காரணமா என்ற கேள்வியும் விமர்சனமும் எழுந்தது.
சீனா தனக்கு ஏற்பட்ட ஆபத்து மற்றும் வெள்ளப்பெருக்கு குறித்த முன்எச்சரிக்கை தகவல்களைக் கீழ்நோக்கிப் பாயும் நேபாளப் பகுதிக்கு முன்கூட்டியே வழங்கி எச்சரிக்கவில்லை என்றும், இதனால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகவும் நேபாளத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்களும் நிபுணர்களும் குற்றஞ்சாட்டினர். எல்லைப் பகுதிப் பாதுகாப்பில் நேபாளம் ஒத்துழைப்புத் தந்தும், சீனா தகுந்த நேரத்தில் தகவல் தெரிவிக்காதது வருத்தமளிப்பதாக நேபாளத் தரப்பில் ஆதங்கம் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த நேபாளத்தில் உள்ள சீனத் தூதரகம், சீனா எச்சரிக்கை அனுப்பாததால் தான் நேபாளத்தில் இழப்பு ஏற்பட்டது என்ற செய்தி முற்றிலும் பொய்யானது (Fake) என மறுத்துள்ளது. ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் அல்லது பனிப்பாறை சரிவு இரு நாடுகளிலுமே பெரும் நிலச்சரிவையும் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், இத்தகைய பேரிடர் காலத்தில் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்குப் பதிலாக இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதே உயிர்களைக் காக்கும் என்றும் சீனா தெளிவுபடுத்தியுள்ளது.
