LATEST NEWS
BREAKING : பரந்தூர் அருகே SIPCOT தொழிற்பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை.!!
பரந்தூர் அருகே புதிய சிப்காட் (SIPCOT) தொழிற்பூங்கா அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்ட இடத்திற்கு அருகே அமைந்துள்ள மதுரமங்கலம் கிராமத்தில் 422 ஏக்கர் பரப்பளவில், ரூ.175 கோடி மதிப்பீட்டில் இந்தத் தொழிற்பூங்கா உருவாக்கப்பட உள்ளது. இதற்கான அரசாணையைத் தமிழக அரசு முறைப்படி வெளியிட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட உள்ள இந்தத் தொழிற்பூங்காவில் செமிகண்டக்டர் மற்றும் மின்னணு சாதன உற்பத்தி மையங்கள் நிறுவப்பட உள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் பெரும் தொழில் வளர்ச்சியும், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
