LATEST NEWS
“ஓட்டு கேட்டு வரும்போது ஒரு பேச்சு.. ஜெயிச்சதுக்கு அப்புறம் ஒரு பேச்சா..?” வாக்காளர்களின் கேள்விகளால் அலறியடித்து ஓடிய அமைச்சர் ஜெகதீஸ்வரி.. வைரல் வீடியோ..!!
ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக அமைச்சர் ஜெகதீஸ்வரி, தனது பகுதி வாக்காளர்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்க முயன்றபோது அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அவரது வருகையின் போது, அப்பகுதியில் தொடர்ந்து நீடித்து வரும் மின்வெட்டுப் பிரச்சனை மற்றும் டாஸ்மாக் கடைகளால் ஏற்படும் இன்னல்கள் குறித்துப் பொதுமக்கள் அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி முற்றுகையிட முயன்றனர். பொதுமக்களின் இந்த திடீர் கேள்விகளாலும், எதிர்ப்புகளாலும் அங்கு தர்மசங்கடமான சூழல் உருவானது.
இதைத் தொடர்ந்து, நிலைமை கட்டுக்கடங்காமல் போவதை உணர்ந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, பொதுமக்களுக்குச் சரியான பதிலளிக்காமல் அங்கிருந்து உடனடியாகத் தனது காரில் புறப்பட்டுச் சென்றார். அமைச்சர் சம்பவ இடத்தை விட்டுச் சென்ற பிறகு, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் தொகுதி மக்கள், அங்கிருந்த அமைச்சரின் கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்கள் பகுதிப் பிரச்சனைகளைத் தீர்க்காமல் தட்டிக்கழிப்பதாகக் கூறி பொதுமக்கள் ஆவேசமடைந்ததால், இரு தரப்பிற்கும் இடையே நீண்ட நேரம் காரசாரமான விவாதம் நீடித்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
