“சொந்த வேலையா… இல்லை முதலீடா…?” லண்டனில் இருந்து திரும்பியதும் விஜய் பதில் சொல்ல வேண்டும்… கொந்தளித்த நயினார் நாகேந்திரன்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சொந்த வேலையா… இல்லை முதலீடா…?” லண்டனில் இருந்து திரும்பியதும் விஜய் பதில் சொல்ல வேண்டும்… கொந்தளித்த நயினார் நாகேந்திரன்..!!!

Published

on

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் பயணம் குறித்து, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளதுடன், லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய பிறகு இதன் பின்னணி குறித்து முதலமைச்சர் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் விஜய் 8 நாட்கள் பயணமாக இங்கிலாந்தின் லண்டன் நகருக்குச் சென்றுள்ளார். சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டைப் பார்வையிடுதல், சர்வதேசத் தொழிலதிபர்களைச் சந்தித்தல் மற்றும் புதிய முதலீடுகளை ஈர்த்தல் ஆகியவை இப் பயணத்தின் நோக்கங்கள் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “முதலமைச்சர் விஜய் சொந்த விஷயத்திற்காக வெளிநாடு சென்றுள்ளாரா அல்லது லண்டனில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகத் தொழிலதிபர்களைப் பார்க்கச் சென்றுள்ளாரா என்ற விவரம் அவர் லண்டனில் இருந்து சென்னை திரும்பிய பிறகே முழுமையாகத் தெரியவரும். எனவே, இது தொடர்பான அதிகாரப்பூர்வ விளக்கத்தை அவரே வெளியிட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், வரவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அதிமுக – பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தற்போதைய கூட்டணிக் கட்டமைப்பு மிகவும் பலமாக உள்ளதாகவும், இத்தேர்தலில் தங்களது கூட்டணி நிச்சயமாக மாபெரும் வெற்றியைப் பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். முதலமைச்சரின் லண்டன் பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருவது அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in