LATEST NEWS
“வயிற்று வலி என்று போன 15 வயது சிறுமி..!” மருத்துவ அறையில் டாக்டர் செய்த ‘அந்த’ அசிங்கமான காரியம்.. வெளுத்து வாங்கிய மக்கள்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!
டெல்லியில் 15 வயது சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதாகக் கூறி தவறான முறையில் நடக்க முயன்ற மருத்துவரை, அங்கு திரண்ட பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். தனக்கு வயிற்று வலிப்பதாகக் கூறிய சிறுமியைப் பரிசோதித்த அந்த மருத்துவர், வயிற்றுப் பகுதியைச் சரிபார்ப்பதற்குப் பதிலாக அவரது மார்பகப் பகுதியில் அநாகரீகமாகத் தொட்டு அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அச்சிறுமி வெளியில் வந்து அங்கிருந்தவர்களிடம் அழுதுகொண்டே நடந்த விபரத்தைக் கூறியுள்ளார்.
சிறுமியின் இந்த வாக்குமூலத்தைக் கேட்டவுடன் அங்கிருந்த பொதுமக்களின் ஆத்திரம் எல்லை கடந்தது. உடனடியாக அந்த மருத்துவரைச் சூழ்ந்துகொண்ட பொதுமக்கள், அவருக்கு அங்கேயே தர்மஅடி கொடுத்து முறையான ‘கவனிப்பு’ கொடுத்துள்ளனர். இச்சம்பவம் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
