CRIME
“அடிப்பாவி.. நாத்தனார் கணவனுடன் கள்ள உறவு..”நேரில் பார்த்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி போட்ட பயங்கர ஸ்கெட்ச்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ஹுசைனாபாத் கிராமத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் ராகிப் அலியை, அவனது மனைவியான தபஸ்ஸும் மற்றும் அவரது நாத்தனார் கணவர் ஷாரூக் ஆகிய இருவர் சேர்ந்து பாலில் விஷம் வைத்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த தபஸ்ஸும், தனது கணவரின் சகோதரியை மணந்த ஷாரூக் என்ற நபருடன் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர்களது கள்ள உறவை கணவர் ராகிப் நேரில் பார்த்து கண்டித்ததோடு, வீட்டிலேயே இருந்து அவர்களைக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதல் ஜோடி, தங்களது உறவுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ராகிப்பைத் தீர்த்துக்கட்டத் தந்திரமாகத் திட்டம் தீட்டினர்.
அதன்படி, ஒரு நாள் இரவு ராகிப் குடிக்கும் பாலில் மயக்க மருந்து மற்றும் விஷத்தைக் கலந்து கொடுத்துக் கொன்றுவிட்டு, அவர் மாரடைப்பால் இறந்தது போல நாடகமாடியுள்ளனர். உறவினர்களின் மரண ஓலத்திற்கு மத்தியில் ராகிப்பின் உடலை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். எனினும், ராகிப்பின் குடும்பத்தினருக்கு தபஸ்ஸும் மற்றும் ஷாரூக் மீது பலத்த சந்தேகம் இருந்ததால் போலீசில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து நடத்திய பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் அவர்களின் மொபைல் போன் அழைப்பு விவரங்களை வைத்து விசாரணை நடத்திய முசாபர்நகர் போலீசார், தபஸ்ஸும் மற்றும் ஷாரூக் ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் மோகத்தால் பெற்ற பிள்ளைகளையும் தவிக்கவிட்டு, கணவனைக் கொன்ற பெண்ணின் இந்தச் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
