LATEST NEWS
விநாயகர் பிரியாணி சமைப்பதா..? கொந்தளித்த பக்தர்கள்… அதிரடியாக இறங்கிய காவல்துறை.. ஒரே ஒரு பேனரால் பற்றி எரியும் திருநெல்வேலி..!!
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் உள்ள ஒரு பிரியாணி கடைக்கு வெளியே வைக்கப்பட்ட விளம்பரப் பேனர் பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த விளம்பரப் பேனரில் விநாயகப் பெருமான் பிரியாணி சமைப்பது போன்ற படம் இடம்பெற்றிருந்ததே இந்த சர்ச்சைக்கும் மக்களின் கொந்தளிப்பிற்கும் முக்கியக் காரணமாக அமைந்தது.
அந்தப் பேனரில் விநாயகர் பிரியாணி சமைக்கும் படத்துடன், “அரேபியன் ஸ்டைல் 65 பிரியாணி – ரூ. 99” என்று அச்சிடப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் ஆன்மீகப் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறி 42 வயதான செல்வராஜ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், ஞாயிற்றுக்கிழமையன்று அந்தப் பிரியாணி கடையின் உரிமையாளரான 30 வயது ஜெயந்த் என்பவரைக் கைது செய்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த சர்ச்சைக்குரிய விளம்பரப் பேனரை அங்கிருந்து அகற்றினர். மேலும், இந்த பேனரை வடிவமைத்து அச்சிடச் சொன்னது யார் மற்றும் இது எப்போது கடையின் முன் வைக்கப்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
