TRENDING
தன்வீட்டில் வாய், காது கேட்காத தாயின் கண்முன்னே மகளுக்கு நேர்ந்த கொடூரம் ….? தீவிர சிகிச்சையில் குழந்தை …..
இந்தியா”வல்லரசு நாடு “என்று கூறுவார்கள் ஆனால் தற்பொழுது இந்தியா “வன்புணர்வு நாடு” என்றானது. இந்தியா என்றால் அனைவரும் அச்சப்படும் நிலைமைக்கு தள்ளிவிட பட்டுள்ளது, இந்தியாவில் அதிகமாக நடக்கும் கொடுமையில் முதலிடம் பிடிப்பது வன்கொடுமைதான் , அதிலும் இளம்பெண்களை குறிவைத்து வன்புணர்வு செய்வதை விட சின்னஞ்சிறு குழந்தைகளும் ,சிறுமிகளும் தான் அதிகமாக வன்புணர்வு செய்து கொலையும் செய்து விடுகிறார்கள் , இந்த காலகட்டத்தில் பெண் குழந்தைகள் பிறந்தால் அதனை எப்படி பாதுகாப்பது என்ற அச்சத்திலேயே பெண் குழந்தையை வேண்டாம் என்று சொல்லி கருவிலேயே அழித்து விடுகிறார்கள் . காரணம் வன்கொடுமைதான் ,ஆனால் அந்த காலத்தில் பெண் குழந்தை என்றால் வரதக்க்ஷனை கொடுக்க வேண்டும் என்று கருவில் அழித்தார்கள் .
இந்த காலமும் சரி அந்த காலமும் சரி பெண் என்றால் அழித்து விடுவது தான் என்பது மரபு போல் ஆகிவிட்டது அதுவும் இந்த காலத்தில் வன்புணர்வு செய்து அழித்து விடுவது மிக கொடுமையான ஒன்று , அதற்கு கள்ளிப்பால் எவ்வளவோ மேலாகும் .
அதிலும் முக்கியமாக பாரதிய ஜனதா கட்சி தலைமையில் ஆட்சி நடைபெற்று வரும் உத்திரபிரதேச மாநிலத்தில் மட்டும் அடிக்கடி பாலியல் வன்முறை நிகழ்வுகள் அரங்கேறிய வண்ணமே இருந்து வருகின்றது.
உத்திரபிரதேச மாநிலத்தில் சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பின்னரே, போக்ஸோ சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதுவரைக்கும் அந்த சிறுமியின் தந்தை கொடுக்க முயன்ற புகாருக்கு போலீசார் பதில் அளிக்காமல் அலட்சியப்படுத்தினார்கள் .
இதுகுறித்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரில், சிறுமி எதற்காக விஷம் அருந்தினால் என்றால் , கடந்த சனிக்கிழமை அன்று பிற்பகல் சிறுமியின் தந்தை எப்பொழுதும்போல் வேலைக்குச் சென்றுவிட்டார். அவருடைய தாய் மொட்டைமாடியில் ஏதோஒரு வேலை செய்து கொண்டு இருந்தார்கள்.அப்பொழுது சிறுமி தனியாக இருப்பதாய் அறிந்த ஒரு நபர்
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். அவர் வேறு யாரும் இல்லை பக்கத்து வீட்டை சேர்ந்த சர்வேஷ் ராவத் (32) என்கிற தொழிலதிபர் , அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அந்த சிறுமியை தான் குழந்தை என்று நினைக்காமல் நாசப்படுத்தி இருக்கிறார் அந்த நாசகர் சர்வேஷ் ராவத். சிறுமியை அவர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதிலும் கொஞ்சம் கூட ஈவுஇரகம் இல்லாமல் இருந்து இருக்கிறார், ஏன் என்றால் அந்த சிறுமியின் தாய்க்கு வாய்,காது கேட்காத ஒருவர் .
இதற்கிடையில் கீழே வந்த அந்த தாய், மகள் வன்புணர்வுக்குள்ளாக்கப்படுவதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்து தடுக்க முயற்சித்துள்ளார். பாவம் அந்த தாய்க்கு வாய் பேச முடியாததால் அவரால் உதவிக்கு கூட யாரையும் கத்தி கூப்பிடமுடியாத நிலைமையில் இருந்தார். அதனால், அவர் எவ்வளவோ தடுத்தும் தாயை மோசமாக அடித்துவிட்டு அவர் கண்ணெதிரே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவுள்ளார், படத்தில் நிகழ்வதை போல் .
இறுதியாக அந்த கொடூரன் சர்வேஷ், தாய் மற்றும் மகளை கடுமையாக தாக்கியதோடு, வெளியில் கூறினால் கொன்றுவிடுவேன் என மிரட்டிவிட்டு சென்றதாக கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில் குற்றவாளி சர்வேஷ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அந்த சிறுமிக்கும் தாய்க்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்றும் பொலிஸார் தகவல் தெரிவித்வுள்ளனர்.