கொரோனா வைரஸ் எதிரொலி அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் – அப்படி என்னதான் நடந்துச்சி - cinefeeds
Connect with us

LATEST NEWS

கொரோனா வைரஸ் எதிரொலி அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் – அப்படி என்னதான் நடந்துச்சி

Published

on

உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களையும் பெரும் வல்லரசு நாடுகளின் அரசையும் மிகவும் பீதியில் ஆழ்த்தியுள்ள விசயம் கொரோனா வைரஸ் தாக்குதல். பெரும் வல்லரசாண சீனாவில் பரவ தொடங்கிய இந்த நோயால் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இதனால் பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நோய் பல நாடுகளில் பரவியும் வருகிறது.

இதற்காக பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளன. இந்நிலையில் இந்தியாவின் சில மாநிலங்களில் சிலருக்கு நோய் தொற்று இருப்பதாக கூறி பரிசோதிக்கப்பட்டு வருகிறது.இதன் எதிரொலியாக சினிமா வட்டாரத்திலும் பிரதிபலிக்க தொடங்கியுள்ளது. கேரளாவில் வரும் மார்ச் 31 வரை தியேட்டர்களை மூடுமாறு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

ஏற்கனவே ஜேம்ஸ் பாண்ட் படத்தின் அடுத்த பாகமான நோ டைம் நோ டு டை படம் உலகளவில் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் மலையாள நடிகர் மோகன்லால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாக இருந்த மரைக்காயர் படம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம்.

இந்த செய்தியானது சினிமா ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in