LATEST NEWS
தீராத பிரச்சனை..! இன்று நீதிமன்றத்தில் ஆஜர்… அமைச்சர் மரிய வில்சனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் போட்ட ‘அதிரடி’ உத்தரவு…!!
தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் மீது, சொத்து தகராறு காரணமாகத் தனது சொந்தச் சகோதரர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அவரையும், அவரது மனைவி கெரோலினையும் தாக்கியதாக லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தின் தலையீடும் சமரசப் பரிந்துரையும் இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அதில் இருந்து விலக்களிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் அமைச்சர் மரிய வில்சன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இது ஒரு குடும்பப் பிரச்சனை என்பதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் அமைச்சர், அவரது தந்தை, சகோதரர் மற்றும் சகோதரியின் மனைவி ஆகியோர் ஆஜராகி தீர்வு காண அறிவுறுத்தியது.
தற்போதைய நிலவரம் மற்றும் அடுத்தகட்ட விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததன் அடிப்படையில், இன்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் அமைச்சர் மரிய வில்சன் உள்ளிட்டோர் ஆஜரானார்கள். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த சமரசப் பேச்சுவார்த்தை நிறைவடையாத காரணத்தால், விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூலை 21ஆம் தேதி மீண்டும் அமைச்சர் உள்ளிட்டோர் சமரச தீர்வு மையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
