LATEST NEWS
“ரோடா இது… இல்ல இஞ்சி வேரா..?” குருகிராம் ரோட்டையும் நகரத்தையும் கலாய்த்துத் தள்ளி… இணையத்தை அல்லாட வைக்கும் பெண்..!!
குருகிராம் நகரத்தின் மோசமான சாலைகள், கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் திட்டமிடப்படாத வளர்ச்சி குறித்து சாக்ஷி என்ற பெண் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நகைச்சுவையான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெரிய நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் உயரமான கட்டிடங்கள் நிறைந்த நவீன நகரமாக குருகிராம் பார்க்கப்பட்டாலும், அங்கு வாழும் மக்கள் தினமும் சந்திக்கும் உள்கட்டமைப்புப் பிரச்சினைகளை இந்த வீடியோ வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
அந்த வீடியோவில், குருகிராம் நகரம் எந்தவித சரியான திட்டமிடலும் இன்றி கண்டபடி வளர்ந்திருப்பதை அவர் ‘இஞ்சி’ வேருடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். இஞ்சி எவ்வாறு அனைத்து திசைகளிலும் ஒழுங்கற்ற முறையில் படர்கிறதோ, அதேபோல்தான் இந்த நகரமும் அவசர அவசரமாக உருவாக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார். மேலும், ஒரு பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த கெட்டுப்போன மகன் நகர திட்டமிடல் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல் தன் விருப்பப்படி ஒரு நகரத்தை உருவாக்கியது போல இது காட்சி அளிப்பதாக அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/reel/Da0iCwmu6Gr/?utm_source=ig_web_button_share_sheet
குறிப்பாக மழைக்காலங்களில் சாலைகளில் நீர் தேங்குவது, பள்ளங்களில் வாகனங்கள் மாட்டி விபத்து ஏற்படுமோ என்ற பயத்துடனே பயணிக்க வேண்டியிருப்பது போன்ற அன்றாட சிரமங்களை அவர் இதில் விவரித்துள்ளார். குருகிராமில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தினமும் உணரும் இந்த அவலநிலையை சாக்ஷி மிகவும் இயல்பாகவும் சுவாரஸ்யமாகவும் வெளிப்படுத்தியதால், பல நெட்டிசன்கள் அவருடைய கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.
