CRIME
“ஸ்கூட்டர்ல ஜாலி ரைடு போலாமா?”.. 2.5 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற பக்கத்து வீட்டு பெண்.. CCTV-யில் சிக்கிய அந்த ஒரு நிமிடம்.. பதறவைக்கும் பின்னணி..!!
2.5 வயதேயான சின்னஞ்சிறு குழந்தை தில்ரோஸ், தனது குடும்பத்தினரின் அன்பிலும் அரவணைப்பிலும் செல்லக் குழந்தையாக வளர்க்கப்பட்டவள். இந்த அப்பாவிச் சிறுமியின் மீது கொண்ட பொறாமையால், பக்கத்து வீட்டைச் சேர்ந்த நீலம் என்ற பெண், ஜாலியாகச் சவாரி செல்லலாம் என்று ஆசை வார்த்தை கூறி குழந்தையைத் தன் ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், யாரும் இல்லாத ஒரு பாழ்நிலத்திற்கு அவளைக் கடத்திச் சென்று, செங்கலால் கொடூரமாகத் தாக்கியும், அலறிய குழந்தையின் வாயில் மண்ணைத் திணித்தும், உயிருடனேயே குழியில் புதைத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
Heartbreaking story of 2.5-year-old Dilroz (Diljot):
This innocent little girl was the beloved youngest child of her family, adored by everyone.
A jealous, divorced neighbor named Neelam lured her away on a scooter with the promise of a fun ride. She took her to a deserted… pic.twitter.com/couNcW7U2q— Breaking Beta (@MenMuscleMoney) July 21, 2026
சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் காவல்துறை அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்தபோதிலும், மூச்சுத்திணறி அந்தச் சின்னஞ்சிறு உயிரைக் காப்பாற்ற முடியாமல் போயிற்று. இந்த கொடூரச் செயலை “அரிதினும் அரிதான வழக்கு” (Rarest of rare case) என விவரித்த நீதிமன்றம், குற்றவாளி நீலத்திற்குத் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. தற்போது, அந்த மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி நீலம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
