LATEST NEWS
‘இந்த உலகில் எவருக்கும் இப்படி நடக்க கூடாது’…. “என்னை விட்டு தனியாக ஹனிமூனுக்கு”.. ‘சென்ற மனைவி…கண்கலங்கிய நடிகர்’..?
பாலிவுட் நடிகர் அனில் கபூர் தனது காதல் மனைவி சுனிதாவை பற்றி மற்றும் அவர்களது வாழ்க்கையை பற்றியும் மிகவும் உருக்கத்துடன் கூறியது அனில்கபூர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் கூறுகையில், முதன் முதலில் என் நண்பர் ஒருவர் மூலம் தான் சுனிதாவிடம் அறிமுகமானேன்.அதன் பின்னர் போனில் முதன் முதலில் பேசினேன்.
முதலில் அவர் குரலை கேட்கும் போதே அந்த குரலின் மீது எனக்கு காதல் வந்தது.
இதனையடுத்து இருவரும் நட்பாக பழகி வந்தோம். நாளடைவில் அதுவே காதலாக மாறியது. காதலிக்க தொடங்கியதுமே நான் கேட்ட ஒரு கேள்வி நாளைக்கே நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என சுனிதாவிடம் கேட்டேன், அதற்கு அவர் உடனே ஓகே சொன்னார் பின்னர் நண்பர்கள் 10 பேர் முன்னிலையில் எங்கள் திருமணம் சிம்பலாக நடைபெற்றது.
மேலும் சினிமாவில் நான் தோல்வியுற்ற நேரத்தில் சுனிதா தான் எனக்கு பக்கபலமாக இருந்தார். அதன் பின்னர் திருமணம் முடிந்து தேனிலவுக்கு வெளிநாடு செல்லவிருக்கும் நிலையில் எனக்கு திடீரென ஷூட்டிங் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து சுனிதா மட்டும் தேனிலவுக்கு தனியாக சென்ரார்.
கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் அவர் தனியாக தேனிலவுக்கு சென்றுஇருந்தார். அவரை போல மனிதரை இனி என் வாழ்க்கையில் நான் சம்பாதிக்க முடியாது. சுனிதா சிறந்த அம்மாவாகவும் மற்றும் நல்ல மனைவியாகவும் இருந்தார் என உருக்கமாக தெரிவித்திருந்தார்.