தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஆர் ஜே பாலாஜி. இவர் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே பிரபல வானொலியில் பணியாற்றி வந்ததால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவரின் குரலுக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு புத்தகம் என்ற படம் பின்னணியில் பேசி தனது பயணத்தை தொடங்கினார். பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்தில் துணை நடிகராக நடித்ததன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இவர் கிட்டதட்ட 20 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.முதன்முறையாக கடந்த 2019 ஆம் ஆண்டு எல்கேஜி என்ற திரைப்படம் மூலம் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய இவர் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படம் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுத்தார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரன் பேபி ரன் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்திற்காக ஆர் ஜே பாலாஜி நான்கு கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.இதனை தொடர்ந்து அவர் நடிக்க இருக்கும் படத்தில் சம்பளத்தை 7 கோடியாக உயர்த்தியுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஆர் ஜே பாலாஜி இயக்குனர் கோகுல் இயக்கத்தில் சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.