திடீர் விபத்தில் சிக்கிய நடிகை ஆலியா மானசா…. என்ன ஆச்சு?…. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

திடீர் விபத்தில் சிக்கிய நடிகை ஆலியா மானசா…. என்ன ஆச்சு?…. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்….!!!!

Published

on

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரின் மூலம் இருவரும் சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள்.அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாடு என்ற நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளராக கலந்துகொண்டார் ஆலியா மானசா. அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் சஞ்சீவுடன் இணைந்து நடித்திருந்தார்.

இந்த சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தனர். மேலும் சீரியலின் போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அப்போது சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து மீண்டும் கர்ப்பம் ஆனதால் சீரியலில் இருந்து விலகிய இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு தனது உடல் எடை கூடியதால் உடல் எடையை குறைப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு தற்போது மீண்டும் புதிய சீரியலில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

Advertisement

அதாவது சன் டிவியில் இனியா என்ற சீரியலில் நடிக்கின்றார். அந்த சீரியல் அண்மையில் தான் தொடங்கியது. இந்நிலையில் தற்போது ஆலியா மானசா விபத்தில் சிக்கியுள்ளார். அவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதனை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில் அதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in