LATEST NEWS
திடீரென பல மடங்கு சம்பளத்தை உயர்த்திய நடிகை அஞ்சலி…. கேட்டதும் ஷாக்கான தயாரிப்பாளர்கள்…. எவ்வளவு தெரியுமா….???
தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதன் பிறகு அவர் நடித்த அங்காடித்தெரு, தூங்கா நகரம்,மங்காத்தா மற்றும் கலகலப்பு போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தன. பின்னர் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வந்த அவர் ஒரு கட்டத்தில் கொழுக்கு மொழுக்கு நடிகையாக மாறிவிட்டார் .
அவரின் அந்த உடல் தோற்றம் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இருந்தாலும் சில பட வாய்ப்புகள் கையை விட்டு சென்றதால் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறினார். இவரின் நடிப்பில் தற்போது ஏழு கடல் ஏழுமலை என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ராம் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நிவின் பாலி மற்றும் சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் இன்னும் வெளியாகாத நிலையில் அஞ்சலைக்கே இப்படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது.
அதாவது இந்த திரைப்படம் வெளிவந்தால் தன்னுடைய மார்க்கெட் உயரும் என்று அவர் எதிர்பார்த்து உள்ளார். இதன் காரணமாக இந்த திரைப்படத்திற்கு பிறகு அஞ்சலி கமிட்டாகும் படங்களுக்கு தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி விட்டார். அதாவது ஒரு கோடி வரை அஞ்சலி தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள்.
