LATEST NEWS
விஜய்க்கு அடுத்த தலைவலி..! ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்தில் காலணியுடன் ஏறிய அமைச்சர் ரமேஷ்? – சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோவால் வெடித்த சர்ச்சை..!!
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில் கோபுரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் காலணியுடன் ஏறியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவிலின் புனிதம் மற்றும் பாரம்பரிய விதிமுறைகளை அமைச்சர் மீறிவிட்டதாகக் கூறி, ஆன்மீகவாதிகளும் பக்தர்களும் சமூக வலைதளங்களில் தங்களது கடும் கண்டனங்களையும் விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், சர்ச்சைக்குரிய இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உயர்மட்ட அளவில் விளக்கம் கேட்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் உண்மையில் விதிமுறைகளை மீறினாரா அல்லது அது தவறாக சித்தரிக்கப்பட்ட வீடியோவா என்ற கோணத்தில் துறையின் உள் விசாரணை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
சர்ச்சை ஒருபுறமிருக்க, இந்தச் சம்பவத்திற்கு முன்னதாக அமைச்சர் ரமேஷ் ஸ்ரீரங்கம் கோவிலில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். குறிப்பாக, கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் தினசரி அன்னதானத் திட்டம் ஆகியவை தொய்வின்றி நடைபெறுகிறதா என்பது குறித்து அவர் அதிகாரிகளிடம் நேரில் கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.
