விஜய் பட ஹீரோயினா இது…? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை… லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…!! – cinefeeds
Connect with us

CINEMA

விஜய் பட ஹீரோயினா இது…? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை… லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…!!

Published

on

கன்னடத் திரையுலகில் அறிமுகமாகி, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரக்சிதா. தமிழில் சிலம்பரசனின் ‘தம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், விஜய்யின் ‘மதுர’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்களிடையே பெரும் புகழ்பெற்றார். அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘பம்பரக் கண்ணு’ பாடல் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. கன்னடம் மற்றும் தெலுங்கில் மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர் போன்ற டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த இவர், 2007-ஆம் ஆண்டு இயக்குநரைத் திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.

 விஜய்யின் சினிமா கரியரில் முக்கியமான படமாக அமைந்தது 'மதுர'. ஆர்.மாதேஷ் இயக்கிய இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் ரக்சிதா. ஆம், அவர் தான் இந்த நாயகி. கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட இவர் ஸ்வேதா என்கிற இயற்பெயரை சினிமாவுக்காக ரக்சிதா என மாற்றிக்கொண்டார். இவரின் தந்தை சினிமா ஒளிப்பதிவாளர். அதே நேரம் தாய் பிரபல நடிகை.

திருமணத்திற்குப் பிறகு தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் புதிய அவதாரம் எடுத்த ரக்சிதா, கடந்த 19 ஆண்டுகளில் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். தற்போது அடையாளமே தெரியாத அளவிற்கு உடல் எடை கூடியுள்ள அவரது சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அரசியலில் பல கட்சிகளுக்கு மாறியும் தேர்தல் வாய்ப்பு கிடைக்காததால், தற்போது தீவிர அரசியலில் இருந்து விலகியுள்ள அவர், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராகவும், இல்லத்தரசியாகவும் தனது வாழ்க்கையைத் தொடர்கிறார்.

Advertisement

 இந்த வெற்றியால் தென்னிந்திய சினிமாவில் முக்கிய நாயகர்களான மகேஷ் பாபு, உபேந்திரா, ஜூனியர் என்டிஆர், நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா ஆகியோருடன் ஜோடியாக நடித்தார். 3 ஆண்டுகளில் டாப் ஹீரோயினாக வலம்வந்த ரக்சிதா, தமிழில் இரண்டாவது படமாக விஜய்யின் 'மதுர' படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் இவரின் 'பம்பர கண்ணு', 'ஐஸ் கட்டி' உள்ளிட்ட பாடல்கள் இன்றளவும் பிரபலம்.

Copyright © 2023 www.cinefeeds.in