LATEST NEWS
“ஆபீஸுக்கு வர முடியாது… ஆனா வேலை நடக்கும்…! இடுப்பளவு வெள்ளத்திலும் குறையாத கடமை உணர்வு..! கேப் கூரையை ஆபிஸாக மாற்றிய இளைஞர்… குருக்ராமில் வைரலாகும் ‘அல்டிமேட் வொர்க் ஃப்ரம் ஹோம்’…!!
குருக்ராமில் பருவமழை காரணமாகச் சாலைகளில் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த பயணி ஒருவரின் கேப் வாகனம் வெள்ளத்தில் சிக்கி பழுதடைந்தது. எனினும், இந்தத் தடங்கலால் தனது வேலை பாதிக்கப்படுவதை அவர் விரும்பவில்லை.
கட்டுக்கடங்காத நெரிசலால் அலுவலகத்திற்குச் சென்று சேர முடியாது என்பதை உணர்ந்த அவர், உடனடியாகத் தனது அலுவலகத்தைத் தொடர்புகொண்டு ‘வீட்டிலிருந்து வேலை’ செய்வதாகத் தெரிவித்தார். பின்னர், பழுதடைந்த காரின் உள்ளே காத்திருக்காமல், தனது மடிக்கணினியை எடுத்துக்கொண்டு கேப் வாகனத்தின் கூரை மீதேறி அமர்ந்து அலுவலக வேலைகளையும் அழைப்புகளையும் மேற்கொள்ளத் தொடங்கினார்.
அவரைச் சுற்றி வாகனங்கள் நெரிசலில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த நிலையில், கேப் கூரையில் அமர்ந்து அவர் வேலை செய்யும் இந்தக் காட்சி இணையத்தில் வீடியோவாக வெளியாகி வைரலானது. ‘அட்சய மேத்தா’ என்ற X பயனர் பகிர்ந்த இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இது “வீட்டிலிருந்து வேலை செய்வதன் தீவிரமான வடிவம்” என்றும், அவரது வித்தியாசமான தொழில் அர்ப்பணிப்பு என்றும் நகைச்சுவையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
