LifeStyle
இரவில் ‘ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த 23 வயது இளம் பெண்’.. “பின் சீட்டில் உட்கார்ந்திருந்த”.. ‘இரு இளைஞர்களால் அரங்கேறிய’.. .கொடுமை
சென்னையில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த இளம் பெண்ணிற்க்கு நடந்த கொடுமை நெற்குன்றத்தில் இருந்து அம்சிக்கரைக்கு செல்வதற்காக 23 வயது இளம் பெண் ஒருவர் ஷேர் ஆட்டோவோல் பயணம் செய்தார் அப்போது அப்பெண்ணின் பின் சீட்டில் அமர்ந்திருந்த இரு வாலிபர்கள் அந்த இளம் பெண்ணின் தலை முடியை வெட்டியுள்ளார். இதனை உணர்ந்த பெண் தீடிர் என்று கூச்சலியிட்டார்.
உடனே டிரைவர் ஆட்டோவை ஓரம் கட்டி நிறுத்தினார் பின்னர் என்ன என்று பார்த்த போது பின்னல் இருந்த இரு வாலிபர்களை சோதனை செய்ததில் ஒரு வாலிபரின் பாக்கெட்டில் வெட்டப்பட்ட பெண்ணின் தலைமுடி இருந்தது. இதனையடுத்து அந்த வாலிபர் தப்பிக்க முயற்சித்தார். அருகில் இருந்த சக பயணிகள் அவரை மடக்கி பித்தனர்.
பின்னர் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் வழக்கு எதுவும் தேவையில்லை என்று கூறினார். இதனால் அந்த வாலிபரின் பெற்றோர்களை வரவழைத்து கண்டித்தனர்.
