LATEST NEWS
“நான்தான் முடிவெடுத்தேன்… உதயநிதியின் கேள்விக்கு… பேரவையில் உண்மையைப் போட்டுடைத்த முதல்வர் விஜய்..!!”
காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகக் கர்நாடகாவிற்குச் செல்ல முயற்சித்தது உண்மைதான் என்று தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உதயநிதி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அவர், காவிரிப் பிரச்சினையில் கர்நாடக மாநிலத்திற்குச் செல்ல வேண்டும் என்ற முடிவை வேறு யாரும் அழுத்தமாகத் திணிக்கவில்லை என்றும், அந்த முடிவை எடுத்தது நான்தான் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
காவிரிப் பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்க்க வேண்டும் என்பதற்காகவே அங்கு செல்ல முடிவெடுத்ததாக முதல்வர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். உலகளவில் தீவிரப் பகை நாடுகள்கூடத் தங்களுக்குள் பேசிப் பார்க்கும்போது, கர்நாடகா நமது பக்கத்து மாநிலம்தானே, எனவே பேசிப் பார்க்கலாம் என்ற அடிப்படையிலேயே அந்த முடிவை எடுத்ததாக அவர் பேரவையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
