குடும்பத்தில் கழுத்தை நெரித்த கடன் தொல்லை… தன்னுடைய ஆசையை கைவிட்டு சினிமாவில் நுழைந்த தனுஷ்… பலரும் அறியாத தகவல்…!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

குடும்பத்தில் கழுத்தை நெரித்த கடன் தொல்லை… தன்னுடைய ஆசையை கைவிட்டு சினிமாவில் நுழைந்த தனுஷ்… பலரும் அறியாத தகவல்…!!!

Published

on

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவரை நடிப்பில் இறுதியாக வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். சாணி காகிதம் மற்றும் ராக்கி ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர்.

பீரியட் படமாக உருவாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு யாத்திரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக திடீரென அறிவித்தனர். இவர்களின் பிரிவிற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய தந்தையால்தான் சினிமாவில் நடிகராக நுழைந்துள்ளார்.

Advertisement

அதாவது கஸ்தூரிராஜாவிற்கு அப்போது கடன் தொல்லை அதிகமாக இருந்த காரணத்தால் தனுசை வைத்து படத்தை எடுத்துள்ளார். தன்னுடைய குடும்பத்திற்காக சமையல் கலைஞராக வேண்டும் என்ற தனது ஆசையை தனுஷ் கைவிட்டுள்ளார். ஒருவேளை தனுஷ் சமையல் கலைஞர் ஆகி இருந்தால் இந்த அளவிற்கு ரசிகர்கள் அன்பே கிடைத்திருக்காது என்பதும் யோசிக்க வேண்டிய ஒரு விஷயம் தான்.

Advertisement
Continue Reading
Advertisement