LATEST NEWS
அடுத்த ஷாக்..! “துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள்” கைதான திமுக MLA மார்க்கண்டேயன் கதறல்..!!
விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், காவல்துறையினர் விசாரணையின்போது தன்னை உடல் ரீதியாகத் தாக்க முயன்றதாகவும், துப்பாக்கி முனையைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டுவதாகவும் மிகவும் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ‘முதலமைச்சர் விஜய்யின் எலும்புகளை உடைப்பேன்’ என்று பொதுக்கூட்ட மேடையில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி, இன்று அதிகாலை அவர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். கைதானதைத் தொடர்ந்து, காவல் துறையின் இந்த அத்துமீறிய நடவடிக்கைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து அவர் தனது கடுமையான கண்டனங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
மார்க்கண்டேயன் மீது தவெக நிர்வாகி கொடுத்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைதைக் கண்டித்து திமுகவினர் எஸ்பி அலுவலகம் மற்றும் நான்கு வழிச்சாலைகளில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், காவல்துறையினர் தன்னைத் துப்பாக்கி முனையில் மிரட்டுவதாக எம்.எல்.ஏ-வே நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளது இந்த அரசியல் மோதலையும், மாவட்டத்தின் சட்டம்-ஒழுங்கு பதற்றத்தையும் உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
