Uncategorized
‘அரசு பள்ளியில் படித்த 4 மாணவர்கள்’… “எடுத்த விபரீத முடிவு கதிகலங்கிய பெற்றோர்கள்”… ‘ஈரோட்டில் நடந்த பகீர் தகவல்’…?
ஈரோடு அடுத்த பெருந்துறை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் விஜய், மிதுன் ரித்தீஷ், மவுலி, தருண்ஸ்ரீ ஆகிய நன்கு மாணவர்கள் நேற்று பள்ளிக்கு சென்றவர்கள் இரவு வெகுநேரமாகியும் வீற்றிக்கு வரவில்லை. இதனால் பதற்றமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மாணவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
பின்னர், பள்ளியில் உள்ள சக மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது படிப்பு செலவு அதிகமாக இருப்பதால் எங்கள் பெற்றோர்களுக்கு நாங்கள் பாரமாக இருக்க விரும்பவில்லை என காணாமல்போன மாணவர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனிடையே விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி அருகே நான்கு மாணவர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.