Uncategorized
ஏழு கழுத வயதில் 8’ம் வகுப்பு மாணவி மீது ஒ’காதல்…மொட்டை மாடியில் கேட்ட அலறல் சத்தம்… ‘அக்கம் பக்கத்தினர் வந்ததால்.. பாதியில் விட்டு சென்ற இளைஞர்’!
சென்னையை அடுத்த அம்ஜிகரை முத்துமாரியம்மன் காலனியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் நித்தியானந்தன். இவரின் மேல் வீட்டு மாடியில் இருக்கும் 8ம் வகுப்பு மாணவி அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை மாலை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.
உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது நித்தியானந்தன் அந்த பள்ளி சிறுமியின் கழுத்தில் கத்தியால் அறுக்க முயற்சி செய்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதைப் பார்த்த நித்தியானந்தன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார் .
இதனையடுத்து மாணவியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தினமும் அந்த சிறுமியை பார்த்து ரசித்து கொண்டு இருந்த நித்தியானந்தன் ஒருதலையையாக காதலித்து வந்துள்ளார்.
பெற்றோர்கள் வெளியே சென்றதால் பள்ளி முடிந்து மொட்டை மாடியில் தனியாக இருந்துள்ளார் இதனை பயன்படுத்தி சிறுமியிடம் நித்தியானந்தன் தன்னை காதலிக்க சொல்லி வற்புறுத்தி உள்ளார், அதற்கு சிறுமி மறுக்கவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுமியின் கழுத்தை அறுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தப்பியோடிய நித்தியானந்தனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.