TRENDING
‘தம்பியுடன் விளையாடி கொண்டு இருந்த 6 வயது சிறுமி’… பின்னர் 2 நாட்கள் ‘கழித்து தெரியவந்த உண்மை நாட்டையே’… உலுக்கிய நிகழ்வு..?
காணாமல் போனதாக சொல்லப்பட்ட, 6 வயது சிறுமி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொட்டியம் பள்ளிமன் பகுதியை சேர்ந்த பிரதீப்குமார் அரபு நாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், இவரது மனைவி தன்யா மற்றும் 3 மாத குழந்தைகளுடன் கொல்லம் இத்திகாரா ஆற்றின் கரையோரத்தில் வசித்து வந்தனர். இவர்களது 6 வயது மகள் தேவநந்தா 1 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக பள்ளி ஆண்டுவிழா விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார்.
அப்போது காலை அவரது தாய் தன்யா, பின்புறம் துணி துவைக்க சென்றபோது, பின்னாலேயே வந்த மகள் தேவநந்தாவை, தூங்கிக் கொண்டிருந்த 3 மாத தம்பியை பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.
மகள் வீட்டுக்குள் செல்வதைப் பார்த்த தாய், 15 நிமிடங்கள் கழித்து வந்து பார்த்த போது தேவ நந்தாவை இல்லை இதனால் அதிர்ச்சியடைந்தார். பின்னர் எங்கெங்கோ எங்கே தேடியும் கிடைக்காததால், போலீசில் புகார் அளித்தார். மேலும் மகளின் போட்டோக்களை வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் என பதிவிட்டு செய்தியும் வெளியிட்டார்.
இந்நிலையில், இவர்களது வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் ஆறு உள்ளது. ஒருவேளை சிறுமி ஆற்றில் தவறி விழுந்திக்கலாம் சந்தேகத்தில் போலீசார் மீட்புப் பணியில் இறங்கினர். இதற்கிடையில் தகவல் தெரிந்து தேவநந்தாவின் தந்தை வெளிநாட்டில் இருந்து திரும்பினார். சிறுமி எப்படியும் கிடைத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் உறங்கச் சென்ற கேரள மக்களுக்கு வெள்ளிக்கிழமை விடியல் மோசமானதாக இருந்தது. அதிகாலையில் சிறுமியின் உடல் ஆற்றில் மிதப்பதை அருகிலிருந்தவர்கள் பார்த்துள்ளனர். தன்யாவின் வீட்டிலிருந்து 600 மீட்டர் தொலைவில் சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டனர்.
இதையடுத்து, அவரது உடல் அரசு மருத்துவ கல்லூரி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. சிறுமியின் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் போலீசில் புகார் செய்தனர். சிறுமி தனியாக ஆற்றுக்கு நடந்து செல்ல வாய்ப்பு இல்லாததால், யாராவது அவரை கடத்தி சென்று கொலை என்றும் கூறிவந்தனர் . இந்நிலையில் பிரேதப் பரிசோதனையில் சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
தடயவியல் சோதனையிலும் அவரது உடலில் காயங்கள் எதும் இருந்ததாகக் கூறப்படவில்லை. சுவாசக்குழாயில் சேறும் மண்ணும் இருந்துள்ளது. மேலும் காணாமல் போன சமயத்தில் போட்டிருந்த உடையுடன் அவரது தாயின் துப்பட்டாவும் இருந்துள்ளது . எனவே, சிறுமி நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கை உறுதி செய்துள்ளது.