Uncategorized
‘கொரோனா குணமடைந்நிலையிலும் …’ ‘விடாமல் துரத்தும் பயம்…’ ‘கணவனுக்கு’ நேர்ந்த ‘பரிதாப நிலை…’?
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சமீபத்தில் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இருந்தார். பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார்.
மருத்துவமனையில் இருந்து தனது மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்களை பார்க்க ஆவலுடன் வீட்டுக்குச் சென்றார். ஆனால் நீண்ட நாள் பிறகு தன் கணவரைப் பார்த்த மனைவியின் முகத்தில் எந்த வித சந்தோஷமும் இல்லை.
மேலும் கணவரை வீட்டுக்குள் வரக்கூடாது என்று அவரது மனைவி மறுத்து விட்டார். தாலி கட்டின கணவராக இருந்தாலும் அவரால் தனது குடும்பத்தினருக்கு இந்த கொடிய கொரோனா வைரஸ் பரவ கூடாது என்பதற்காகவே அவரை வீட்டுக்குள் விட மறுத்து விட்டதாக அவர் மனைவி கூறியுள்ளார். அதன் காரணமாக அந்த நபர் தற்போது மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் உள்ளார்.
இந்த செய்தியால் கேரளாவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த தகவலை கேரள முதல்வர் பினராயி விஜயனும் உறுதிபடுத்தி உள்ளார். இதுகுறித்து குறிப்பிட்ட அவர், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவருக்கு மீண்டும் கொரோனா தொற்று வராது. இதுதொடர்பாக விழிப்புணரவும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சொந்த கணவரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த பெண் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு மருத்துவ கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது.