LATEST NEWS
“நீ எம்.எல்.ஏ மகளா இருந்தா எனக்கு என்ன..? அடிச்சா திருப்பி அடிப்பேன்..!” விஐபி சீன் போட்ட ஐஸ்வர்யாவை அறைந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள புகழ்பெற்ற ‘ஆரத்தி உக்கடா’ கோயில் கருவறைக்குள், சாதாரண பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்திய விவகாரத்தில் பாஜக எம்.எல்.ஏ-வின் மகளும் பெண் சப்-இன்ஸ்பெக்டரும் ஒருவரையொருவர் நடுரோட்டில் அறைந்து கொண்ட விபரீதச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துமகூரு ரூரல் தொகுதி பாஜக எம்.எல்.ஏ பி.சுரேஷ் கவுடாவின் மகள் ஐஸ்வர்யா, தனது குழந்தைகளுடன் சாமி தரிசனம் செய்ய வந்தபோது தனக்கு உடனே ‘விஐபி’ அனுமதி வேண்டும் என அடம் பிடித்துள்ளார். அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த மாண்டியா மகளிர் காவல் நிலையச் சப்-இன்ஸ்பெக்டர் சவிதா பாட்டீல், சாதாரண பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் 2 நிமிடங்கள் பொறுமையாக இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யா, தனது எம்.எல்.ஏ அதிகாரப் பின்னணியைக் காட்டி போலீஸ் அதிகாரியைக் கொடூரமாக வசைபாடியதோடு, திடீரென அவரது கன்னத்தில் பலார் என அறைந்து அவரது வேலையைக் காலி செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
भाजपा विधायक की बेटी ने मंदिर के गर्भ गृह में महिला सिपाही को चांटा मारा, तो पलट कर महिला सिपाही ने भी भाजपा विधायक की बेटी को थप्पड़ जड़ दिया.
कर्नाटक के तुमकुरु ग्रामीण सीट से BJP विधायक बी. सुरेश गौड़ा की बेटी ऐश्वर्या अपने बच्चों के साथ मांड्या जिले के श्रीरंगपटना तालुक में… pic.twitter.com/eMwZTwZZyn— Reporter Rajeev (@RajivRathi999) August 25, 2026
பாஜக எம்.எல்.ஏ மகள் அடித்த அடுத்த கணமே, சற்றும் யோசிக்காத பெண் சப்-இன்ஸ்பெக்டர் சவிதா பாட்டீல் சட்ட ஒழுங்கைக் கையில் எடுத்து ஐஸ்வர்யாவின் கன்னத்திலும் பலாரெனத் திருப்பி அடித்து அதிரடி பதிலடி கொடுத்துள்ளார். கோயில் கருவறைக்குள்ளேயே மக்கள் முன்னிலையில் அரங்கேறிய இந்த அனல் பறக்கும் மோதல் சம்பவம், அங்கிருந்த பக்தர்களை உறைந்துபோகச் செய்துள்ளது. தற்போது இந்த விவகாரம் கர்நாடக அரசியல் மற்றும் காவல்துறை வட்டாரத்தில் பூதாகரமாக வெடித்துள்ள சூழலில், விதிமுறைகளை மீறித் தாக்குதல் நடத்தியதற்காக பாஜக எம்.எல்.ஏ மகள் ஐஸ்வர்யா மற்றும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் சவிதா ஆகிய இருவர் மீதும் மாண்டியா போலீஸார் பரஸ்பரம் (Cross FIR) வழக்குகளைப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாரத் தோரணையில் வந்தவருக்குக் காவல்துறை அதிகாரி கொடுத்த இந்த மரண மாஸ் பதிலடி குறித்த செய்திகள் தற்போது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.
