LATEST NEWS
“கார்டுல வச்சி தள்ளுனீங்களே அது என்ன..?” அமைச்சர் சரத்திற்கு எதிராக கொந்தளித்த முன்னாள் அமைச்சர் நேரு.. பேரவையில் வெடித்த புதுப் பூகம்பம்..!!
இன்று நடைபெற்ற தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக அமைச்சர் சரத் இடையே போதைப்பொருள் விவகாரம் தொடர்பாகக் கடுமையான காரசார விவாதம் ஏற்பட்டது. சட்டமன்றத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சரத் ஐபிஎஸ் மைதானத்தில் அமர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தியதாகப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். இதற்குப் பதிலடி கொடுத்துப் பேசிய அமைச்சர் சரத், “இதற்கான விளக்கத்தை நான் ஏற்கனவே தெளிவாகக் கூறிவிட்டேன்; ஒருவேளை மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது உண்மை என்றால், அதை அங்கு கொண்டு வந்து விற்றது திமுகவினரா?” என்று காட்டமான எதிர்க் கேள்வியை எழுப்பினார்.
அமைச்சர் சரத்தின் இந்தக் கேள்விக்கு உடனடியாகப் பதிலளித்துக் குறுக்கிட்ட திமுக முன்னாள் அமைச்சர் நேரு, “நீங்க கார்டில் வைத்து தள்ளினீர்களே அது என்னவென்று முதலில் சொல்லுங்கள்” என்று பழைய விவகாரம் ஒன்றைச் சுட்டிக்காட்டி வறுத்தெடுத்தார். போதைப்பொருள் குற்றச்சாட்டு விவகாரங்களால் இன்று சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே பெரும் பரபரப்பும் மோதல் சூழலும் நிலவியது.
