LATEST NEWS
சுத்தத்தில் நம்ம ஊருக்கே டஃப் கொடுக்கும் போல… வாவ் எவ்ளோ அழகா இருக்கு.. மும்பை மெட்ரோவை பார்த்து வியந்த ஐஐடி ஜப்பான் மாணவி… இணையத்தில் வைரலாகும் பாராட்டு..!!!
ஐஐடி ஹைதராபாத்தில் படித்து வரும் ‘ஹீரோ’ என்ற ஜப்பானிய மாணவி, தான் முதன்முறையாக மும்பை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த அனுபவத்தை ஒரு வீடியோவாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்தியாவின் பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் அதன் அண்மைக்கால வளர்ச்சி வெளிநாட்டு மாணவர்களைக் கவர்ந்து வருவதை இந்த வீடியோ உணர்த்துகிறது. அவர் சத்ரபதி ஷாஹுஜி மகாராஜ் டெர்மினஸ் மெட்ரோ நிலையத்திலிருந்து பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மெட்ரோ நிலையம் வரை சுமார் 21 கிலோமீட்டர் தூரம் இந்த மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார்.
இந்த பயணத்தின் போது மெட்ரோ நிலையத்தின் நவீன டிஜிட்டல் வசதிகள் அந்த மாணவியை மிகவும் கவர்ந்துள்ளன. அங்குள்ள டிக்கெட் வழங்கும் இயந்திரம் மூலம் க்யூஆர் கோடு தயாரித்து, டிஜிட்டல் வாலட் மூலம் மிக எளிதாக டிக்கெட் கட்டணத்தை அவர் செலுத்தியுள்ளார். டிக்கெட் கவுண்ட்டர்கள் இருந்தபோதிலும், பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சேருமிடத்தை மட்டும் குறிப்பிட்டு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் இந்த தானியங்கி முறை தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மெட்ரோ நிலையத்திற்குள் மாம்பழ லஸ்ஸி வாங்கி பருகியதையும் மகிழ்ச்சியுடன் காட்டியுள்ளார்.
https://www.instagram.com/reel/DaP__ZCP52D/?utm_source=ig_web_button_share_sheet
மும்பை மெட்ரோவின் தூய்மை மற்றும் அதன் சிறந்த நிர்வாகத்தை வெகுவாகப் பாராட்டியுள்ள ஹீரோ, இந்தியாவின் பொதுப் போக்குவரத்து அமைப்புகளிலேயே மெட்ரோ தான் மிகச்சிறந்தது என்று புகழாரம் சூட்டியுள்ளார். வெறும் 50 ரூபாய் போன்ற மிகக் குறைந்த கட்டணத்தில் இவ்வளவு உலகத்தரம் வாய்ந்த மற்றும் தூய்மையான வசதிகள் கிடைப்பது வியப்பளிப்பதாகக் கூறியுள்ளார். இந்தியாவின் போக்குவரத்து நெரிசல் மற்றும் குறைபாடுகளை மட்டுமே காட்டும் வீடியோக்களைப் பார்த்துவிட்டு இந்தியா வரத் தயங்கும் மற்ற வெளிநாட்டினருக்கு, நாட்டின் இந்த நேர்மறையான மாற்றத்தை காட்டும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.
