LATEST NEWS
திருமணமாகி தல பொங்கலை தனிமையில் கொண்டாடிய மகாலட்சுமி…. போட்டோவை பார்த்து கேள்வி கேட்கும் ரசிகர்கள்….!!!!
சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திடீரென நடந்த நிலையில் பல சர்ச்சைக்குள்ளானது. அதுமட்டுமல்லாமல் பல விமர்சனங்களும் எழுந்த நிலையில் இவை அனைத்தையும் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் திருமணத்திற்கு பிறகு சீரியல் அதிகம் கவனம் செலுத்தி வரும் மகாலட்சுமி மறுபக்கம் ஆடை அணிகலன் சார்ந்த சேலை மற்றும் பல பொருள்களை விளம்பரம் படுத்தி வருகிறார். அப்படி சேலைகளின் விளம்பரத்திற்காக போட்டோ ஷூட் எடுத்தும் அந்த புகைப்படங்களை அவர் பகிர்ந்து வருகின்றார். இந்நிலையில் திருமணம் ஆகி முதல் பொங்கலை இருவரும் இந்த வருடம் கொண்டாடியுள்ளனர். ஆனால் மகாலட்சுமி மட்டும்தான் பொங்கல் செய்து கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் எங்கே உங்க வீட்டுக்காரர் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
