LATEST NEWS
“மனிதநேயம் இன்னும் சாகலப்பா..!” நடுரோட்டில் அழுதுகொண்டிருந்த பெண்… ஆட்டோ ஓட்டுநரின் ‘அந்த’ ஒரு வார்த்தை… இணையவாசிகளை கண்கலங்க வைத்த சம்பவம்..!!
காசியாபாத்தைச் சேர்ந்த ஏழைப் பெண் ஒருவர் சந்தைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, வழியில் அவரது பணப்பை திருடப்பட்டது. அதில் ரூ.1,500 ரொக்கப் பணமும் ஏடிஎம் கார்டும் இருந்ததால், இரவு நேரத்தில் தனியாக நின்றிருந்த அந்தப் பெண் பயத்திலும் அதிர்ச்சியிலும் மயக்கம் அடைவது போல் உணர்ந்துள்ளார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநரிடம் சென்ற அந்தப் பெண், “அண்ணா, என் பை திருடப்பட்டுவிட்டது; எனது அறை 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, என்னை அங்கு இறக்கிவிட முடியுமா?” என்று உதவியைக் கேட்டுள்ளார்.
गाजियाबाद की रहने वाली ये गरीब लड़की, मार्केट से घर जा रही थी तभी रास्ते में इसका पर्स चोरी हो गया, जिसमें ₹1500 रूपए एक ATM कार्ड था।
रात का समय था लड़की अकेली थी, चक्कर आने लगे, तभी पास खड़े एक ऑटो ड्राइवर से बोली, भैया मेरा पर्स चोरी हो गया है, 5 किलोमीटर मेरा रूम है, ड्रॉप… pic.twitter.com/ls1R7N0xsV— BHUMI (@Bhumika_2024) August 10, 2026
அந்தப் பெண்ணின் நிலையைக் கண்டு இரக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர், “மகளே, உன்னைப் போல எனக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள், கவலைப்படாதே; 5 கிலோமீட்டர் தூரம் என்பது பெரிய விஷயம் இல்லை, நான் உன்னை பத்திரமாக கூட்டிச் செல்கிறேன்” என்று கூறித் தனது மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளார். அன்பான வார்த்தைகளுடன் அந்தப் பெண்ணை அவரது அறையில் பத்திரமாக இறக்கிவிட்டுச் சென்ற அந்த ஆட்டோ ஓட்டுநரின் செயல், இன்றும் மனிதநேயம் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது.
