LATEST NEWS
“ஐயோ இதை குடிச்சா என்ன ஆகுறது..?” குளிர்பான பாட்டிலில் மிதந்ததை கண்டு அலறியடித்த வாடிக்கையாளர்கள்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மகர்பா பகுதியில் அமைந்துள்ள சுபாரு உணவகத்தில் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் குளிர்பான பாட்டிலைத் திறந்து பருக முற்பட்டபோது, அதற்குள் பூச்சிகள் மிதப்பது கண்டுபடிக்கப்பட்டது. உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார வழிமுறைகளை முற்றிலுமாகப் புறக்கணிக்கும் இத்தகைய செயல்கள், மக்களின் உடல்நலத்தோடு பகிரங்கமாக விளையாடும் அவல நிலையைக் காட்டுகின்றன. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது இது தொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
गुजरात में लोगों की सेहत के साथ खिलवाड़…🙄
अहमदाबाद के मकरबा स्थित सबरू रेस्टोरेंट में कुछ लोगों के खाने के दौरान सॉफ्ट ड्रिंक की बोतल खोली गई, तो उसमें कीड़े दिखाई दिए
खाद्य सुरक्षा को लेकर यह बेहद ही गंभीर मामला है
लोग अपनी मेहनत की कमाई से खाना खरीदते हैं, बदले में… pic.twitter.com/JZHkYkYm3o— Sanju (@SanjuKu79832010) August 18, 2026
மக்கள் தங்களது கடின உழைப்பின் மூலம் ஈட்டிய பணத்தைச் செலவழித்து உணவகங்களில் உணவையும் குளிர்பானங்களையும் வாங்கும் போது, அதற்கு ஈடாகப் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்வது உணவு வணிகர்களின் அடிப்படைக் கடமையாகும். உணவக உரிமையாளர்கள் அல்லது சப்ளையர்களின் இத்தகைய கடுமையான அலட்சியப் போக்கு மக்களின் ஆரோக்கியத்திற்கு நேரடி அச்சுறுத்தலாக மாறுவதுடன், உணவுப் பாதுகாப்புத் துறையின் தீவிரக் கண்காணிப்பின் அவசியத்தையும் உணர்த்துகிறது. மக்களின் உயிரோடும் உடல்நலத்தோடும் விளையாடும் இதுபோன்ற அலட்சியங்களுக்கு எதிராகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
